Friday, May 11, 2012

மஜா மல்லிகா கதைகள் 530

-- இனிய தோழி மல்லிகா ஊடகங்களைப் பார்க்கும் போது பலவாறான கவலைகள் மனசை வாட்டுகின்றன. வயிற்றில் கட்டி என்று கூடப் படிக்கும் பெண்களிடம் சொல்லி பாத்ரூமில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த கல்லூரி மாணவி திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பில்லை என்று உச்சநீதி மன்றம் சொல்வது தன்னை மிகப் பெரிய ஆன்மீக வாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் அயோக்கியத்தன்ங்கள் இவற்றின் நடுவே உனது இந்த காமத்தை தூண்டும் இந்தப் பகுதி. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்- இதில் நல்லது எது கெட்ட்து எது- ஒன்றும் புரியவில்லை மல்லிகா. உன் நோக்கம் என்னதான் என்று தெளிவு படுத்த முடியுமா- _________பாலசரஸ்வதி விஸ்வநாதன். திருமதி பாலசரஸ்வதி விஸ்வநாதன் முன்பே எழுதியுள்ள ஒரு விசித்திரமான காதல் கதை வெளியிடும் வரிசையில் காத்திருக்கிறது. ஆனால் தற்பொழுது இவர் எழுப்பியிருக்கும் பிரச்சினை சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதால் இதனை முன்னதாக எடுத்துக் கொண்டுள்ளேன். இவர் சொல்லியுள்ள கல்லூரி மாணவி குறித்து நானும் படித்தேன். தன் காதலனுடன் பாதுகாப்பின்றி ஓத்து விட்டு கரு உருவான பின்னராவது அதிலிருந்து விடுபட தன் தாயிடமாவது சொல்லியிருக்க வேண்டும். அதனை விடுத்து டெலிவரி வரை மறைக்க முயன்ற இந்தப் பெண்ணின் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது- ஆக செக்ஸ் பற்றிய அவேர்னஸ் இல்லாத்தே இந்தக் கொடுமைக்கு காரணம். தகுந்த பாதுகாப்புடன் தன் காதலனுடன் அவள் ஓத்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதே . இவ்வாறான செக்ஸ் பற்றிய அறியாமையினை ஓரளவாவது நமது பகுதி செம்மைப் படுத்துகிறது என்றே நினைக்கிறேன். காமம் என்பது தவிர்க்க இயலாத ஒரு அத்தியாவசிய வாழ்க்கை முறையாக அமைந்துள்ளது. அதனைக் கேவலமாகக் கருதுவதாலும் அது மறைக்கப் படவேண்டிய தொன்று என நினைப்பதுவும் தான் இவ்வகை அறியாமையினை வளர்க்கிறது. காமம் குறித்து நமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இன்னும் சரியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒரு கேள்வி-பதில் பகுதியினைப் பார்ப்போம் கேள்வி இள்மையில் காமம் முக்கியமான தேவையா- பதில் ”உங்களுக்கு எதாவது தேவையா-” என்று கேட்கிற பணியாள் அல்ல காமம். அது உங்கள் எஜமானன் ஆகவே எச்சரிக்கையாகப் பழக வேண்டும். காமம் என்கிற கருப் பொருளை மையமாக வைத்து அதைச் சுற்றி உருவாக்கப் பட்டதுதான் மனித உடல். அந்த உடலுக்கு உள்ளே ஒவ்வொரு நாளும் பல கோடி விந்தணுக்கள் ஆணுக்கும் பலகோடி மரபுத் திசுக்கள் பெண்ணுக்கும் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. இரு பாலருக்குமே ஐ விட பல மடங்கு . இளமையில் தான் இதன் உச்சகட்ட சப்ளை. உங்க்ளுடைய பரம்பரையின் அத்தனை வரை படங்களையும் தன்னிடம் வைத்துக் கொண்டு வெளியே கிளம்பி அடுத்த உயிரினத்தை உற்பத்தி செய்வதற்காக அந்த உயிரணுக்கள் எழுப்பும் ஆவேசக் குரல் உங்களூக்கு கேட்கிறதா- செக்ஸில் மனிதன் ஏன் ஈடுபட்த் துடிக்கிறான்- அது ஜோராக இருப்பதால் . அடுத்த கேள்வி – அது ஏன் ஜோராக இருக்கிறது- அது ஜோராக இருந்தால் தான் அதில் மனிதன் தொடர்ந்து ஈடுபடுவான். ஆகவேதான் உயிரினங்கள் தோன்றிய கோடிக் கணக்கான ஆண்டுகளாகவே காமத்தை கருப் பொருளாக வைத்து இயற்கை தன் வித்தையை நிகழ்த்தி வருகிறது. அனேகமாக உலகில் உள்ள அத்தனை பொருட்களுமே யாராவது ஒருவருக்கு காம உணர்ச்சிகளை கிள்ர்ந்தெழவைக்கிற ஒன்றுதான் என்கிறார் புகழ் பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரட் கின்ஸே. இந்தக் காமம் என்ற குதிரை ஓடியே தீரும். லகானை ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டு பயணிப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியும். மற்றபடி இந்த உண்ர்வை மறுக்க்வோ மறைக்கவோ பதுக்கவோ முடியாது. 8212 8212 இந்த பதிலை உங்கள் மல்லிகா அளிக்கவில்லை. நன்றி ஹாய் மதன் பதில்கள்-ஆனந்த விகடன். இதனை விட காமத்தின் சிறப்பைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும். ஆக நிச்சயமாக காமத்தை மறைக்கவோ மறுக்கவோ பதுக்கவோ முடியாது என்பதை ஏற்று கொள்கிறீர்களா- அதில் எவ்வாறு ஜாக்கிரதையாக லகானைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்வது என்பதைத் தான் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்லி வருகிறேன். இது உண்மையில் நம் இளைய தலை முறையினருக்கு செக்ஸ் பற்றிய சரியான புரிந்துணர்தலே ஏற்படுத்தும் முயற்சியே சரி இதனை இவ்வளவு அப்பட்டமாக வெளியிடுவது சரியா என்று சிலர் என்னைப் பார்த்துக் கேட்கலாம். மனித குலம் ஆரம்பித்ததிலிருந்தே காமம் தொடர்பான வடிவங்களையும் காமம் சார்ந்த இலக்கியங்களையும் படைத்தும் ரசித்தும் வந்திருக்கிறது. உங்க்ள் ஊரில் உள்ள கோயில் கோபுரத்தையோ அல்லது தேரையோ கவனித்துப் பாருங்கள். அவற்றில் எத்தனை வினோதமான காம உருவங்கள் உள்ளன. தெய்வீகத்திலேயே காமத்தையும் சேர்த்துப் பார்ப்பது தான் நம் முன்னோர் படைத்த சிலைகள் இலக்கியங்கள். பல்வேறு காலங்களிலும் இவ்வாறான காமத்தை வெளிப்படுத்தும் படைப்புகள் மக்களுக்கு வழங்கப்ப்ட்டு வந்துள்ளது. அவை தற்போது நவீன காலத்திற்கேற்ப இண்டர் நெட்டிலும் படங்களாகவும் படைக்கப் படுகின்றன. இதில் என்ன தவறைக் கண்டீர்கள். அடுத்த ஆன்மீக வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றியது. இந்த் அயோக்கியக்கும்பலின் அட்டூழியத்திற்கு அவர்களை குறை சொல்வதை விட பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் இவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றும் மக்கள் என்ற மந்தை இனத்தைத் தான் குறை சொல்ல வேண்டும். எத்தனை பேர் என்னை எப்படி வாரித் தூற்றிடினும் என் முடிவு இதுவே – ”நரை திரை பிணி மூப்பு இறப்பு போன்ற மனித நியதிகளுக்கு உட்பட்ட எந்த ஒரு மனிதனையும் நான் இறைவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்” அது நித்யானந்தாவுக்கும் சரி மருவத்தூர் பஞ்சாயத்து யூனியன் ரிக்கார்டி கிளார்க் சாமியாக இருந்தாலும் சரி கல்கியாக இருந்தாலும் சரி சிவசங்கர் பாபாவாக இருந்தாலும் சரி நான் இறைவனை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேனே தவிர இறைவன் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தக் கழைக் கூத்தாடிகளை நான் நம்புவது இல்லை. நான் நிச்சயமாக நாத்தீகவாதி இல்லை. நான் இறைவனை நம்புகிறேன். ஆனால் என் இறைவனுக்கு மதம் இல்லை இனம் இல்லை மொழி இல்லை. அடுத்து குஷ்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்னும் முடிவான தீர்ப்பினை வழங்கிடவில்லை. இதன் தொடர்பான விவாதத்தின் போது வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களிடம் - என்ற வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தமின்றி செக்ஸ் வைத்துக் கொள்வது குற்றமாகாது கிருஷ்ணனும் கோபிகா ஸ்த்ரீகளும் எப்படி வாழ்ந்தனர் என்றும் கேட்டுள்ளனர். இது மாறிவரும் செக்ஸ் அவேர்னெஸ்க்கு ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். இது பற்றிய ஒரு கேள்விக்கு தமிழகத்தின் முதல்வர் சங்க காலத்திலேயே “களவியலும்” இருந்த்தது என்பதைச் சொல்லியிருக்கிறார். ஸ் 8230 .அப்பாடா பாலசரஸ்வதி விஸ்வநாதன் உங்களது குழப்பங்கள் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன் அன்பர்களே இவர் பெயரைப் பார்த்து ரொம்ப வயசானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இவருக்கு வயது 29 தான். ஒரு அருமையான அனுபவத்தை இவர் எழுதியுள்ளார். பின்னர் அது வெளிவரும் 31 2010 12 30 மஜா மல்லிகாவிடம் கேளுங்கள். 2.0 . .

No comments:

Post a Comment